சென்னை: தமிழக அரசு சார்பில் கவியரசு கண்ணதாசனின் 99-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது படத்துக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கவியரசு கண்ணதாசனின் 99-வது பிறந்தநாளையொட்டி சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலை தமிழக அரசு சார்பில் நேற்று மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு அடியில் அவரது உருவ படத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.