தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!

8 months ago 41

சென்னை: தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அன்பில் மகேஸ் அனுமதிக்கப்பட்டிருந்தார்.தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளி கட்டிடங்கள், நூலகங்கள் குறித்து கேட்டறிந்து நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வுகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர் இன்று காலை குணமடைந்த நிலையில் வீடு திரும்பினார்.

The post தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!! appeared first on Dinakaran.

Read Entire Article