தபால் நிலையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வலியுறுத்தல்

2 months ago 9

 

தஞ்சாவூர், நவ.15: காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் கிளை மாநாட்டில் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் 9வது கிளை மாநாடு நடந்தது. கவுரவ தலைவர் மோகன் சங்க கொடியினை ஏற்றி வைத்தார். கிளை சங்கத் தலைவர் குடியரசன் வரவேற்று பேசினார். கிளை செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் ஆண்டறிக்கை படித்தார். பொருளாளர் கருப்பையன் நிதிநிலை அறிக்கை படித்தார்.

முதல் நிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி, கோட்ட செயலாளர் கருப்புசாமி, அஞ்சல் ஆய்வாளர் வினோத் கண்ணன், மாநில பொருளாளர் விஷ்ணு விஜயன், மாநில உதவி பொருளாளர் சுவாமிநாதன், கோட்டத் தலைவர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தபால் நிலையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post தபால் நிலையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article