நாகப்பட்டினம்: மதுரை மாவட்டம் ஆளவந்தான் கரும்பாலை இந்திராநகர் கலெக்டர் ஆபீஸ் காலனியை சேர்ந்தவர் சேதுபதி(31). இவரது மனைவி ராஜேஸ்வரி(30). இருவரும் நேற்றுமுன்தினம் வேளாங்கண்ணிக்கு வந்தனர். அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அங்கு இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது நேற்று மாலை தெரிய வந்தது. இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்து, எதற்காக அவர்கள் தற்கொலை செய்தனர் என விசாரித்து வருகின்றனர்.
The post தனியார் விடுதியில் தம்பதி தற்கொலை appeared first on Dinakaran.