தனது பதவி நிலைத்திருக்க பாஜவிடம் தமிழ்நாட்டை அடமானம் வைத்த எடப்பாடி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்: செந்தில் பாலாஜி கண்டனம்

5 months ago 14


சென்னை: தனது பதவி நிலைத்திருக்க பாஜவிடம் தமிழ்நாட்டை அடமானம் வைத்த எடப்பாடி பழனிசாமி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட ட்விட்டர் பதிவு: தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார். பழனிசாமி தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம்; தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பாஜவிடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும். அடிமைக் கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவதொரு முத்திரை குத்தி அவர்களைக் காலி செய்வதற்காக எந்தவொரு லாபியும் செய்யத் தயங்காத பதவி வியாபாரி பழனிசாமி மற்றவர்களைப் பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண்.

The post தனது பதவி நிலைத்திருக்க பாஜவிடம் தமிழ்நாட்டை அடமானம் வைத்த எடப்பாடி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்: செந்தில் பாலாஜி கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article