சேலம்: சங்ககிரியில் தண்டவாளத்தில் இரும்புக்கம்பி மீது மோதிய ரயிலில் 3 நீதிபதிகள் பயணம் செய்தது தெரியவந்துள்ளது. ஈரோட்டில் இருந்து சென்னை சென்ற ஏற்காடு விரைவு ரயில், தண்டவாளத்தில் கிடந்த இரும்புக் கம்பி மீது மோதியது. கம்பி மீது மோதியதால் எஞ்சின் பழுதாகி 3 மணி நேரம் தாமதமாக மாற்று எஞ்சின் பொருத்தி ரயில் கிளம்பியது. கம்பி மீது மோதிய ரயிலில் ஐகோர்ட் நீதிபதிகள் 3 பேர், ஓய்வுபெற்ற நீதிபதிகள் 2 பேர் பயணம் செய்திருந்தனர்.
The post தண்டவாளத்தில் இரும்புக்கம்பி மீது மோதிய ரயில்: 3 நீதிபதிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.