தொண்டி, ஜூன் 4: கடல் வளம் மற்றும் மீன் வளத்தை பெருக்கும் நோக்கில் கடந்த ஏப்.15ம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாட்டுப் படகுகள் மட்டுமே கரை ஒரங்களில் மீன் பிடித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் நாட்டு படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. சூடை மீன், சிறிய நண்டு உள்ளிட்ட மீன்களே வருகிறது. கட்டா, சீலா உள்ளிட்ட பெரியவகை மீன்கள் கிடைக்கவில்லை.
இதனால் விலையும் சற்று அதிகமாக விற்கப்படுகிறது. பாறை மீன் கிலோ 650 ரூபாய்க்கும், நண்டு ரூ.550, முரல் உள்ளிட்ட மீன்கள் ரூ.600க்கும் காரல் மீன், இறால் உள்ளிட்டவை ரூ.400க்கும் விற்கப்படுகிறது. 600 ரூபாய்க்கு குறைந்து மீன் கிடைக்காததால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
The post தடைகாலம், காற்று வீசுவதால் வரத்து குறைவால் விலை உயர்ந்த மீன்கள் appeared first on Dinakaran.