தஞ்சாவூர், மே 25: தஞ்சை கீழவாசல் பகுதியில் டபீர்குளம் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக எஸ்.என்.எம் நகர், குறிச்சித்தெரு, தஞ்சை- கும்பகோணம் புறவழிச்சாலைக்கு செல்லலாம்.கீழவாசல் மற்றும் தஞ்சை நகர் பகுதிக்கு வந்து செல்வதற்கும் டபீர்குளம் சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. டபீர் குளம் பிரதான சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்றுவரு கின்றன. டபீர்குளம் பிரதான சாலை, எஸ்.என்.எம் நகர், குறிச்சிதெரு உள்பட நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் வடிகால் ஒன்று உள்ளது. இந்த வடிகால் முறையான பராமரிப்பின்றி குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால்கழி வுநீர் வடிந்தோட வழியி ன்றி வடிகாலில் குளம்போல் தேங்கி நிற்கிறது. மழைபெய் யும் நேரங்களில் தேங்கி கிட க்கும் கழிவு நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
தேங்கி கிடக்கும் கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எதிரே பள்ளி வாகனங்கள், சைக்கிள்களில் வரும் மாணவர்கள், கார் வரும்போது இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் நிலைதடுமாறி திறந்து கிடக்கும் வடிகாலு க்குள் அடிக்கடி விழுந்துபல் வேறு அவதிக்குள்ளாகிவரு கின்றனர். எனவே திறந்து கிடக்கும் வடிகாலில்தேங்கி கிடக்கும் கழிவு நீரை அக ற்றி வடிகாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.
The post தஞ்சை கீழவாசல் பகுதி டபீர்குளம் சாலை வடிகாலை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.