தஞ்சாவூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு 2,000 டன் நெல்அரவைக்கு அனுப்பி வைப்பு

2 months ago 10

தஞ்சாவூர், நவ.5: தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.பின்னர் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் தஞ்சை ரயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் 42 ரயில் வேகன்களில் 2000 டன் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

The post தஞ்சாவூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு 2,000 டன் நெல்அரவைக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article