தங்கையாக பழகிய கல்லூரி மாணவியை கடத்தி சென்று கர்ப்பிணியாக்கிய எலக்ட்ரீசியன்: நாமக்கல் அருகே பரபரப்பு

10 hours ago 4

ராசிபுரம்: நாமக்கல் அருகே, கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய எலக்ட்ரீசியன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகேயுள்ள சப்பையாபுரம் வேட்டைக்காரன் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (39), எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி 8 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் அரசு கல்லூரியில் படித்து வந்தார். அந்த இளம்பெண், விஜயகுமாரிடம் அண்ணன் என்ற முறையில் பழகி வந்துள்ளார். அவரை தினமும் தனது டூவீலரில் கல்லூரிக்கு அழைத்து செல்வதை விஜயகுமார் வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம், ஆட்டையாம்பட்டியில் உள்ள பெரியமாரியம்மன் கோயில் விழாவிற்கு, தனது தாயுடன் சென்ற கல்லூரி மாணவி திடீரென மாயமானார்.

இதையடுத்து, மகளை காணவில்லை என அவரது பெற்றோர், ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதேபோல், விஜயகுமாரையும் காணவில்லை என அவரது குடும்பத்தினர், வெண்ணந்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த மாணவியையும், விஜயகுமாரையும் வெண்ணந்தூர் போலீசார் நேற்று கண்டுபிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அப்போது, விஜயகுமார் ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றதும், அவர் தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தங்கள் மகளுக்கு நீதி கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், சப்பையபுரம் பிரிவு ரோடு பகுதியில், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

The post தங்கையாக பழகிய கல்லூரி மாணவியை கடத்தி சென்று கர்ப்பிணியாக்கிய எலக்ட்ரீசியன்: நாமக்கல் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article