சென்னை: தங்கம் விலை நேற்று மேலும் ரூ280 அதிகரித்து பவுன் ரூ64 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் மூலம் தினம்தினம் புதிய உச்சத்தை தங்கம் விலை பதிவு செய்து வருகிறது. கடந்த 1ம் தேதி ஒரு பவுன் விலை ₹62,320 ஆக இருந்தது. 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. எனவே அன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. 3ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ61,640 ஆகவும், 4ம் தேதி ரூ62,480, 5ம் தேதி ரூ63,240, 6ம் தேதி ரூ63,440 ஆகவும் இருந்தது. 7ம் தேதி தங்கம் விலையில் எந்தவித மாற்றமின்றி பவுன் ரூ63,440க்கு விற்பனையானது.
8ம் தேதி அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ120 உயர்ந்து ஒரு பவுன் ரூ63,560க்கு விற்பனையானது. இது, தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சம் என்ற நிலையை தொட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், முந்தைய நாள் விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் அதிகரித்ததை பார்க்க முடிந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ7,980க்கும், பவுனுக்கு ₹280 உயர்ந்து ஒரு பவுன் ரூ63,840க்கும் விற்பனையானது.
இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை எட்டிப் பிடித்தது. தங்கம் தொடர் விலையேற்றம் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. வெள்ளி விலையில் நேற்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
The post தங்கம் விலை மேலும் அதிகரிப்பு: ரூ64 ஆயிரத்தை நெருங்கும் பவுன் appeared first on Dinakaran.