தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது

2 months ago 13

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து சவரன் ரூ.57,200க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அக்டோர் 31ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.59,640க்கு விற்பனையானது. இது தங்கம் வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.57,120க்கு விற்பனையானது. 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

நேற்று முன்தினம் (16ம் தேதி) தங்கம் விலை எவ்வித மாற்றமுமின்றி ஒரு சவரன் தங்கம் ரூ.57,120க்கு விற்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7150க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200க்கும் விற்கப்பட்டது. அதேபோல், இரண்டாம் நாளாக நேற்று வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.100க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,00,000க் கும் விற்பனையானது.

The post தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது appeared first on Dinakaran.

Read Entire Article