டேங்கர் லாரிகள் போராட்டம் தொடர்கிறது: தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்

3 days ago 3

கோவை / நாமக்கல்: எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், காஸ் டேங்கர் லாரிகள் போராட்டம் தொடரும் என்று உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இப்போராட்டம் காரணமாக சுமார் 5,000 டேங்கர் லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகிஉள்ளது.

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய தென்மண்டல எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த சங்கத்தில் உள்ள டேங்கர் லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு எரிவாயு கொண்டு செல்லும் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 5,000 லாரிகள் இயக்கப்படுகின்றன.

Read Entire Article