டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

2 months ago 10

புதுடெல்லி: டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் கடந்த மே மாதத்தில், 200க்கும் மேற்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தன. அதன்பிற்கு விமான நிலையங்களுக்கும் வானில் பறக்கும் விமானங்களுக்கும் தொடர்ச்சியாக வெடிகொண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. நேற்று அதிகாலை நகரில் இருக்கும் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டன. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில் அந்த மிரட்டல் போலி என தெரியவந்தது.

The post டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article