டிராக்டர் "ரொடேட்டரில்" சிக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு.. டிராக்டர் மீது ஏற ரொடேட்டரில் கால் வைத்தபோது விபத்து

8 months ago 47
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், தனது விவசாய நிலத்தை உழுவதற்காக டிராக்டரின் பின்பக்கம் ரொட்டேட்டரைப் பொருத்தியுள்ளார். அதேநேரம் அங்கு வந்த அவரது 11 வயது மகள் ஜெனிகா, தனது தந்தையுடன் டிராக்டரில் அமர்வதற்காக ரொட்டேட்டரில் கால் வைத்து ஏற முயன்றுள்ளார். அதனை கவனிக்காத கார்த்திகேயன் ரொட்டேட்டரை இயக்கவே, சிறுமி அதில் சிக்கி படுகாயமடைந்து உயிரிழந்தார்.
Read Entire Article