டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்.. இனி அரசு பணிகளுக்கு ஒதுக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ளப் போவதாக அறிவிப்பு!!

2 weeks ago 5

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பால் உருவாக்கப்பட்ட ‘டாட்ஜ்’ துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். அதன் பின்னர் எண்ணற்ற சட்ட திருத்தங்கள் செய்த டிரம்ப் அமெரிக்க அரசின் செயல்திறனை அதிகரிக்க, அரசாங்க செயல்திறன் துறை ‘டாட்ஜ்’ உருவாக்கினார். இந்த துறைக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கை தலைமை அதிகாரியாக நியமனம் செய்தார். தொடர்ந்து நிர்வாகத்தில் மஸ்க் கொண்டு வந்த பல அதிரடி முடிவுகளால் அரசுக்கு ஒருநாள் செலவில் இருந்து ரூ.34 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டது.

இந்நிலையில் தான் டிரம்புடன் இணைந்து கொண்டு எலான் மஸ்க் செயல்படுவதால் அவருடைய டெஸ்லா நிறுவனம் உள்ளிட்டவற்றின் பங்குகள் மதிப்பு குறைய தொடங்கின. நேற்று முன்தினம் ஒரேநாளில் 20 சதவீதம் வரை டெஸ்லாவின் லாபம் குறைந்தது. இதனால் சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று அமெரிக்க அரசின் திறன் மேம்பாட்டுத் துறை பணிகளுக்கு ஒதுக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ளப் போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஏனெனில் டெஸ்லா நிறுவனத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் மற்றும் கார் விற்பனை சரிவால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.

The post டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்.. இனி அரசு பணிகளுக்கு ஒதுக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ளப் போவதாக அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article