டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு குரூப் – 4 விடைகளை உரிய நேரத்தில் வெளியிட வேண்டும்

4 months ago 17

மதுரை: பழநி மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்துலட்சுமி, குணசீலன், உள்ளிட்ட சிலர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘குரூப் – 4 தேர்வினை, கடந்த ஜூன் மாதம் எழுதினோம். பணியாளர் தேர்வு நடவடிக்கை முடிந்த பின்பு தான் இறுதி விடை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது சட்டவிரோதம்’ என்று கூறியிருந்தனர். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, ‘‘அனைத்து தேர்வுகளுக்கும் பின்பற்றுவதை போல, குரூப்-4 தேர்வு இறுதி விடைகளையும் உரிய நேரத்தில் வெளியிட வேண்டும்’’ என்று டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் தரப்பில், மதுரை ஐகோர்ட் கிளை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு பிறப்பித்த உத்தரவில்,‘ பணி நியமனத்துக்கு முன்னதாக, விடைகள் வெளியிடப்படாது என்ற டிஎன்பிஎஸ்சியின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. இனி பணி நியமனத்துக்கு முன்னதாகவே, டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் இறுதி விடைகள் வெளியிடப்பட வேண்டும்,’என்று கூறியிருந்தனர்.

The post டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு குரூப் – 4 விடைகளை உரிய நேரத்தில் வெளியிட வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article