
திண்டுக்கல்,
9வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. திண்டுக்கல் மைதானத்தில் மாலை 3.15 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது .
தொடக்கத்தில் சாத்விக், துஷார் ரேஹஜா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர் சாத்விக் 41 ரன்களும் , 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர் .பின்னர் வந்த சாய் கிஷோர் அதிரடியாக விளையாடினார் சிறப்பாக விளையாடி அவர் அரைசதமடித்து அசத்தினார் .
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு திருப்பூர் அணி 182 ரன்கள் எடுத்தது. 183 தொடர்ந்து ரன்கள் இலக்குடன் நெல்லை அணி விளையாடுகிறது.