டி.என்.பி.எல்.: டாஸ் வென்ற நெல்லை பந்துவீச்சு தேர்வு

3 hours ago 2

கோவை,

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதற்கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கும் 6-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி இருந்தது.

மறுபுறம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை வீழ்த்தி தொடரை வெற்றியோடு தொடங்கியது. தற்போது இரு அணிகளும் 2-வது வெற்றிக்கு குறி வைத்துள்ளதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

Read Entire Article