டாஸ்மாக்கில் எந்த தவறும் நடக்கவில்லை; தவறு நடந்ததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி : அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

6 hours ago 1

சென்னை: டாஸ்மாக்கில் தவறு நடந்ததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி நடப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு வைத்துள்ளார். டெண்டரில் எந்த விதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். டாஸ்மாக் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை ஒன்றிய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. டாஸ்மாக் பணி நியமனம், போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தங்களில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை ஏவிவிட்டுள்ளது.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சோதனை என்கிறார்கள் ஆனால் எந்த முதல் தகவல் அறிக்கை என்பதை சொல்லவே இல்லை. அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்று ஒருவர் முன்கூட்டியே சொல்கிறார், அதையே அமலாக்கத்துறை அறிக்கையாக கொடுக்கிறது. மது கொள்முதலை பொறுத்த வரை யாருக்கும் சலுகை காட்டப்படவில்லை. டாஸ்மாக்கில் விற்பனையை பொறுத்தே கொள்முதல் செலவு கணக்கிடப்படுகிறது.

அமலாக்கத்துறை நடவடிக்கையை சட்டப்படி தமிழ்நாடு அரசு எதிர்கொள்ளும். தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை உருவாக்கவே அமலாக்கத்துறை அறிக்கையை வெளியிட்டுள்ளது. நேற்று மாலை அமலாக்கத்துறை இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். டாஸ்மாக் என்பது வெளிப்படையாக செயல்படக் கூடிய நிறுவனம். எந்தவிதமான புதிய கொள்கை முடிவுகளும் எடுக்கப்படவில்லை .

 

The post டாஸ்மாக்கில் எந்த தவறும் நடக்கவில்லை; தவறு நடந்ததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி : அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article