கோவில்பட்டி: “டாஸ்மாக்கில் மிகப் பெரிய மோசமான ஊழல் நடந்துள்ளது. மக்கள் இதை மறக்க வேண்டும் என்பதற்காகத்தான் மாநில சுயாட்சி உள்ளிட்ட நாடகங்களை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் 255-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு இன்று (ஏப்.16) பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.