
கோட்டா,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் உஜ்வால் மிஸ்ரா (வயது 18). ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள பயிற்சி நிலையத்தில் சேர்ந்து 2 ஆண்டுகளாக ஜே.இ.இ. தேர்வுக்கு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்துள்ளார். நாளை (புதன்கிழமை) நடக்கவுள்ள ஜே.இ.இ. தேர்வை எழுத இருந்தநிலையில் கடும் மனஉளைச்சலுக்கு உஜ்வால் ஆளாகியுள்ளார்.
இந்தநிலையில் மாலை 6 மணியளவில் விடுதி அறையில் இருந்து உஜ்வால் மிஸ்ரா வெளியேறினார். கோட்டா ரெயில் நிலையம் நோக்கி சென்ற அவர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உஜ்வால் மிஸ்ராவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.