ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? - நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

2 weeks ago 5

சென்னை: "பாட்ஷா படத்தின் 100-வது நாள் விழாவில் தமிழகத்தின் வெடிகுண்டு கலாச்சாரம் குறித்து நான் பேசினேன். அப்போது ஆர்.எம்.வீரப்பனை வைத்துக்கொண்டு நான் பேசியிருக்கக் கூடாது. அப்போது எனக்கு அந்த அளவுக்கு தெளிவு இல்லை” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இந்த ஆவணப்படத்தில் ஆர்.எம்.வீரப்பன் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ள விடியோவில், “ஆர்.எம்.வீரப்பன் ஆவணப்படத்தில் நான் பேசுவது மகிழ்ச்சி. எனக்கு மரியாதை கொடுத்து, என் மீது அதீத அன்பு பொழிந்தவர்கள் சிலர். பாலசந்தர் சார் , சோ சார், பஞ்சு அருணாச்சலம் சார், ஆர்.எம்.வீரப்பன் சார் ஆகியோர் இல்லை எனும்போது சில நேரங்களில் கடினமாக இருக்கிறது. அவர்களை மிகவும் மிஸ் செய்கிறேன்.

Read Entire Article