சென்னை: ஜூலை 1-ல் மருத்துவர்கள் தினத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவக் கட்டமைப்பிலும், சுகாதாரத் துறை செயல்பாடுகளிலும் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உள்ளது. ஆனால் அதற்கான பங்களிப்பைத் தரும் அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே குறைவான ஊதியம் தரப்படுகிறது. தகுதிக்கேற்ற ஊதியம் வேண்டி அரசு மருத்துவர்கள் நீண்ட காலமாகவே போராடி வருகிறோம்.