ஜார்கண்டில் மீண்டும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி: காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் திட்டவட்டம்

4 months ago 13

ஜார்கண்ட்: ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 13ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்கு சேகரிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பரப்புரைகாக ராஞ்சி சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தோல்வி பயத்தில் உள்ள பாஜக மக்களை திசைதிருப்ப பல்வேறு புதிய விவகாரங்களை கிளப்புவதாக தெரிவித்தார். பாஜக-வின் அனைத்து திட்டங்களையும் முறியடித்து இந்தியா கூட்டணி மீண்டும் ஜார்கண்டில் ஆட்சி அமைக்கும் என்றும் கே.சி.வேணுகோபால் திட்டவட்டமாக கூறினார். இதனிடையே முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் வயது குறித்து பாஜக எழுப்பிய சர்ச்சைக்கு பதில் அளித்துள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா. உரிய ஆதாரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பிப்போம் என்று விளக்கம் அளித்துள்ளது.

The post ஜார்கண்டில் மீண்டும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி: காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article