'ஜானகி' என்ற பெயரில் படம் இருந்தால் என்ன பிரச்சினை? - கேரள ஐகோர்ட்டு கேள்வி

1 day ago 2

திருவனந்தபுரம்,

நடிகரும், மக்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபியின் நடிப்பில் உருவாகியுள்ள கே.எஸ்.கே. (ஜானகி v/s ஸ்டேட் ஆப் கேரளா). இதில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீதிமன்ற வாதங்களுடன் கூடிய திரில்லர் காட்சிகள் இடம்பெற்றுள்ள இதில் சுரேஷ்கோபி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் 'ஜானகி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நாயகிக்கு நீதிபெற்றுக்கொடுக்கும் விதமாக சினிமாவின் கதை அமைந்துள்ளது. இப்படம் நேற்று (27-ந் தேதி) வெளியாக இருந்த நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் படத்தை வெளியிட சென்சார் போர்டு அனுமதி அளிக்கவில்லை.

பாலியல் குற்றம் குறித்துப் பேசும், சில பாலியல் வார்த்தைகள் இடம்பெறுள்ள இப்படத்தில் 'ஜானகி' என்ற பெயர் இருக்கக் கூடாது என மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் என தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து, மலையாள திரையுலகைச் சேர்ந்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், கேரளத்தின் திருவனந்தபுரத்திலுள்ள மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின், அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர்.

இத்துடன், அந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தாமதமாக்கப்படுவதை எதிர்த்து ஜே.எஸ்.கே. படக்குழு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு தணிக்கை வாரியம் அதன் முடிவை விரைவில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், சீதா, ராம் என்ற பெயர்களில் படங்கள் இருக்கும்போது 'ஜானகி' என்ற பெயரில் படம் இருந்தால் என்ன பிரச்சினை? என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு கேரள ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Read Entire Article