ஜாதிவாரி கணக்கெடுப்பை கைவிட்டு விட்டதா பாஜக அரசு?.. காங்கிரஸ்

1 week ago 9

டெல்லி: 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய அறிவிக்கை வெத்து வேட்டாக இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்தார். 2025 ஏப்.30ல் வெளியான அறிவிப்பையே தற்போதைய அரசு, அறிவிக்கையாக வெளியிட்டு உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தொடர் வற்புறுத்தலுக்கு பணிந்துதான் பிரதமர் மோடி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய காங்கிரஸ் கட்சி, தலைவர்களை நகர்ப்புற நக்சலைட்டுகள் என்று மோடி வசைபாடினார். ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை நாடாளுமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நிராகரித்தது மோடி அரசுதான். இன்று வெளியான அரசு அறிவிக்கையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி அறிவிப்பு இல்லையே ஏன்? பின்னர், ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய அறிவிக்கை வெளியாகுமா என்றும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post ஜாதிவாரி கணக்கெடுப்பை கைவிட்டு விட்டதா பாஜக அரசு?.. காங்கிரஸ் appeared first on Dinakaran.

Read Entire Article