ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கலெக்டரிடம் மனு

2 months ago 9

தர்மபுரி, டிச.10: தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை, அதியமான் ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள் நேற்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு, கடந்த 2022-2023ம் ஆண்டுகளில் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி தமிழக அரசின் சட்ட விதிகளின்படியும், கலெக்டர் வழிகாட்டுதலின்படியும் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக தர்மபுரி அருகே தடங்கம் பகுதியில் தனியார் கல்லூரியின் பின்புறம் உள்ள இடத்தினை தேர்வு செய்துள்ளோம். எனவே, மாவட்ட நிர்வாகம் தர்மபுரியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Read Entire Article