ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

17 hours ago 4

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் தோடா பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 3.55 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.18 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 75.69 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

EQ of M: 3.5, On: 06/06/2025 03:55:38 IST, Lat: 33.18 N, Long: 75.69 E, Depth: 5 Km, Location: Doda, Jammu and Kashmir. For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/2Ov0kyJUCy

— National Center for Seismology (@NCS_Earthquake) June 5, 2025
Read Entire Article