சோழிங்கநல்லூர் தொகுதியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் மே 7ல் ஆர்ப்பாட்டம் - இபிஎஸ்

2 weeks ago 3

சென்னை: சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வாழும் மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகள் நிறைவேற்ற வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தலைமையில் வரும் மே 7ம் தேதி, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான, கடந்த 48 மாதகால திமுக ஆட்சியில் மக்களுக்குப் பயன்தரும் திட்டங்கள் எதையும் நிறைவேற்றாமல், அரசு நிதிகள் சுயநலத்தோடு பல்வேறு வகைகளில் வீணடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதேபோல், மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமலும், பல்வேறு வரிச் சுமைகளை மக்கள் மீது சுமத்தியும், சர்வாதிகாரப் போக்கோடு இந்த அரசு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்

Read Entire Article