சொத்துகளை முடக்கி அமலாக்க துறை அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர் குற்றச்சாட்டு

14 hours ago 1

சென்னை: ‘எந்​திரன்’ பட விவகாரத்​தில் தனது சொத்துகளை முடக்​கியதன் மூலம் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்​துள்ளதாக இயக்​குநர் ஷங்கர் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

‘எந்​திரன்’ பட கதை விவகாரத்​தில் காப்பு​ரிமை மீறல் நடந்​துள்ளதாக ஆரூர் தமிழ்​நாடன் என்பவர் சென்னை எழும்​பூர் கீழமை நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இதன் அடிப்​படை​யில் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்​பிலான 3 சொத்துகளை முடக்கி தற்போது நடவடிக்கை எடுத்​துள்ளது.

Read Entire Article