சென்னை: ‘எந்திரன்’ பட விவகாரத்தில் தனது சொத்துகளை முடக்கியதன் மூலம் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இயக்குநர் ஷங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
‘எந்திரன்’ பட கதை விவகாரத்தில் காப்புரிமை மீறல் நடந்துள்ளதாக ஆரூர் தமிழ்நாடன் என்பவர் சென்னை எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 சொத்துகளை முடக்கி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.