சொத்து வரி உயர்வு: சென்னை மாநகராட்சி தீர்மானத்துக்கு தலைவர்கள் கண்டனம்

4 months ago 41

சென்னை: ஆண்டுதோறும் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்தும் அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட, ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு மற்றும் மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்குவது ஆகிய இரு தீர்மானங்கள், மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து நேரடியாக பணத்தை பிடுங்கும் வகையில் இருப்பது கண்டனத்துக்குரியது. ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வை அறிவித்து, மாநகர மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. இதன் மூலம் குடிநீர் வரி, கழிவு நீர் அகற்றல் வரியும் தானாக உயர்ந்துவிடும். வியாபார நோக்கில் மயானத்தை தனியார்மயமாக்கல் என்பதை அதிமுக கடுமையாக எதிர்க்கும்.

Read Entire Article