சேத்துப்பட்டு மலையாளி கிளப்பில் புதிய கட்டிடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக வழக்கு: மாநகராட்சி ஆய்வு செய்ய உத்தரவு

8 months ago 45

சென்னை: சென்னை சேத்துப்பட்டில் உள்ள மலையாளி கிளப்பில் எந்த அனுமதியும் பெறாமல் புதிதாக 12 ஆயிரம் சதுர அடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அயனாவரம் கே.எம்.ஆனந்த் ஜோஷி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ``சென்னை சேத்துப்பட்டில் உள்ள மலையாளி கிளப்பில் உறுப்பினராக உள்ளேன். கிளப் நிர்வாகம்,கிளப்பின் ஒரு பகுதியை தனியாருக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது.

Read Entire Article