செல்போன் பறித்து சென்ற 4 பேர் கைது

3 weeks ago 4

 

ராஜபாளையம், மே 7: ராஜபாளையம் என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் மகன் பத்மநாபன் (21). இவர் தனியார் பால் கம்பெனி ஊழியர். இவர் மற்றும் இவரது ஊரை சேர்ந்த நண்பர்கள் 2 பைக்குகளில் சங்கரன்கோவில் சாலையில் வந்தபோது பத்மநாபன் நிலை தடுமறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர் திசையில் 2 பைக்கில் வந்த 4 பேர், தங்களது பைக்கை நிறுத்திவிட்டு உதவி செய்வதுபோல நடித்து பத்மநாபன் மற்றும் அவரது நண்பர் ராகேஷ் இருவரிடமிருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரில் தெற்கு போலீசார் தெற்கு வெங்காலூரை சேர்ந்த தீபக், அன்புராஜ், குருபாண்டியன், பிரசாந் ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடம் பைக் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

The post செல்போன் பறித்து சென்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article