‘செல்பி எடுத்ததால்...’ - திருச்செந்தூர் கோயில் யானைக்கு திடீர் ஆக்ரோஷம் ஏன்?

6 months ago 22

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் யானையை சுற்றிச் வந்து செல்பி எடுத்ததாலேயே யானை கோபமடைந்து, இருவரை தூக்கி வீசியது தெரியவந்துள்ளது. அந்த யானை தற்போது அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் உள்ளது. அதை புத்துணர்வு முகாமுக்கு அனுப்புவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தெய்வானை என்ற 26 வயது பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை உதவி பாகன் உதயகுமார், அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் பளுகலை சேர்ந்த கி.சிசுபாலன் (59) ஆகிய இருவரையும் யானை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Read Entire Article