சென்னையில் வடமாநில ‘இரானி’ கொள்ளையன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை; காட்​டி கொடுத்த ‘ஷூ’ - என்ன நடந்தது?

3 days ago 4

சென்னை: சென்​னை​யில் அடுத்​தடுத்து 6 மூதாட்​டிகளிடம் நகை பறிப்​பில் ஈடு​பட்ட வெளி​மாநில இரானி கொள்​ளை​யன் ஜாபர், தரமணி ரயில் நிலை​யம் அருகே நேற்று அதி​காலை என்​க​வுன்ட்​டரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். விமானம், ரயி​லில் ஏறி தப்ப முயன்ற மற்ற 2 கொள்​ளை​யர்​களும் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிடம் தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

சென்​னை​யில் நேற்று முன்​தினம் காலை 6 மணி முதல் 7 மணிக்​குள் சைதாப்​பேட்​டை, சாஸ்​திரி நகர், திரு​வான்​மியூர், கிண்​டி, வேளச்​சேரி​யில் மொத்​தம் 6 இடங்​களில் 6 மூதாட்​டிகளிடம் அடுத்​தடுத்து செயின் பறிக்​கப்​பட்​டது. திரு​வான்​மியூரில் செயின் பறிப்​பின்​போது படு​காயமடைந்த மூதாட்​டி, மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். இச்​சம்​பவம் பெரும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்​து, செயின் பறிப்பு கொள்​ளை​யர்​களை பிடிக்க
உடனடி​யாக தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன. விமானத்​தில் தப்ப முயன்ற உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஜாபர் உசேன் இரானி (32), மிசம்சா மேசம் இரானி (20), சென்ட்​ரலில் இருந்து ரயில் மூலம் தப்​பிய சல்​மான் உசேன் இரானி (32) ஆகிய 3 பேர் சுற்றிவளைத்து கைது செய்​யப்​பட்​டனர்.

Read Entire Article