
சென்னை,
சென்னையில் நாளை மறுநாள் பரபாமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது. அதன் விபரம்;
சென்னையில் 04.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சித்தாலப்பாக்கம்: டிஎன்எச்பி காலனி, மாம்பாக்கம் மெயின் சாலை, மகேஸ்வரி நகர், பிரியதர்ஷினி நகர், ஒட்டியம்பாக்கம் மெயின் சாலை, வள்ளுவர் நகர், ஜெயா நகர், விவேகானந்தா நகர்.
மாடம்பாக்கம்: இந்திரா நகர் சாந்தி நிகேதன் காலனி, தம்பையா ரெட்டி காலனி, பார்வதி நகர் வடக்கு, காமாட்சி நகர், பாலாஜி நகர், கற்பகம் நகர், ஏபிஎன் நகர், எம்ஜிஆர் நகர், சாரதா தோட்டம், ஸ்ரீனிவாசா நகர், ரமணா நகர், மாருதி நகர், அண்ணா நகர் மாடம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதி.
அம்பத்தூர்: மில்லினியம் டவுன் கட்டம் I, II & III , பார்க் சாலை, யு.ஆர். நகர், பாலாஜி நகர், குப்புசாமி தெரு, ஜெமி காம்பவுண்ட், கலெக்டர் நகர், எம்எம் மருத்துவமனை, எஸ்எம் நாராயண நகர், ராம் நகர், கலைவானர் காலனி,11 கி.வோ பம்பிங் ஸ்டேஷன், எச்டி சர்வீஸ், நார்த் அவென்யூ சாலை, கொரட்டூர் ரயில்வே, ஸ்டேஷன் முன்பதிவு அலுவலகம், கோட்டூர் பேருந்து நிலையம், 61 முதல் 72வது தெரு வரை, துரைசாமி 1 முதல் 2வது தெரு வரை, தனபால் செட்டி 1 முதல் 2வது தெரு வரை , ரயில் நிலைய சாலை, வ.உ.சி 1 முதல் 2 வது தெரு வரை , லட்சுமி முதலாளி 15வது முதல் 3வது தெரு வரை.
கோவூர்: தண்டலம், ஆகாஷ் நகர் , கெருகம்பாக்கம், மணிமேடு, தரப்பாக்கம், சி பி கார்டன், பாரதியார் தெரு, அம்பாள் நகர், ரோஸ் கார்டன், வணிகர் தெரு.