![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/02/37161939-untitled-1.webp)
சென்னை,
த.வெ.க. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பாலமுருகனுக்கு த.வெ.க. நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர் . மாவட்ட செயலாளர் பாலமுருகனுக்கு ஜேசிபி கொண்டு மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் ,தாம்பரம் பைபாஸ் சாலை போரூர் சுங்கச்சாவடியில் த.வெ.க. நிர்வாகிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . போரூர் சுங்கச்சாவடி அருகே த.வெ.க.வினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .
உடனடியாக போக்குவரத்து போலீசார் த.வெ.க. நிர்வாகிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .