சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதலில் தாக்கப்பட்ட மாணவர் உயிரிழப்பு - 5 பேர் கைது

2 hours ago 2

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இடையில் நடந்த மோதலில் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநில கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி இன்று (புதன்கிழமை) உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன் பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (45) இவருடைய மகன் சுந்தர் (19 ) என்பவர் பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ. அரசியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி சுந்தர் கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்ல சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது ரயில் நிலைய வாசலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் சுந்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

Read Entire Article