சென்னையில் ஒரே நாளில் 9 விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி: அபுதாபி விமான பைலட் ஓய்வுக்கு சென்றதால் 168 பேர் தவிப்பு

4 months ago 15

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 4 புறப்பாடு, 5 வருகை என 9 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். பெங்களூருவில் வானிலை சரியில்லாததால் சென்னையில் தரையிறங்கிய அபுதாபி விமானத்தின் பைலட், பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி ஓய்வெடுக்க சென்றதால் 168 பயணிகள் தவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 9.40 மணிக்கு பெங்களூருக்கு செல்லவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மாலை 6.10 மணிக்கு கவுகாத்தி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இரவு 9.10 மணிக்கு டெல்லி விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10.40 மணிக்கு கொல்கத்தா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Read Entire Article