சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.8920க்கும் சவரன் ரூ.71,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த ஏப்ரல் 22ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு பவுன் ரூ.74,320க்கு விற்பனையானது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து தங்கம் விலை குறைய தொடங்கியது. தொடர்ந்து கடந்த 15ம் தேதி தங்கம் விலை மளமளவென சரிந்து ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
அதை தொடர்ந்து, தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.8,935க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.71,480க்கு விற்பனையானது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது.
அதாவது நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71, 160க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8,895க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.110க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து விற்பனை appeared first on Dinakaran.