சென்னையில் அமித் ஷா | தமிழிசைக்கு நேரில் ஆறுதல்; எஸ். குருமூர்த்தியுடன் ஆலோசனை

1 week ago 5

சென்னை: சென்னை வந்துள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தியின் இல்லத்தக்குச் சென்று அங்கு தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்துப் பேச இருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2 நாள் பயணமாக நேற்றிரவு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Read Entire Article