
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த சந்தேகத்திற்கிடமான 2 பயணிகளை மறித்து அவர்களிடம் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த கைப்பையில் அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட ரூ.1.30 கோடி மதிப்புடைய, 1.4 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல செய்தனர். இதனை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த 2 பயணிகளை கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.