சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்தின் கோரிக்கையை ஏற்றதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி; முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 hours ago 2

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு நிதி ஒதுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டத்துக்கு ரூ.63,236 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த சந்திப்பில் நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சென்னை மெட்ரோல் ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. தமிழ்நாட்டு மக்களின் நெடுநாள் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்தைக் கூடிய விரைவில் நிறைவேற்றுவோம் என உறுதியாக நம்புகிறோம் என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Read Entire Article