சென்னை: போக்குவரத்து கழக நிலுவை பணப்பலன் கோரி போராடிய ஓய்வூதியர்கள் கைது

4 months ago 20

சென்னை: போக்குவரத்துக் கழகங்கள் நிலுவை வைத்துள்ள பணப்பலன்களை வழங்கக் கோரி இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள் கைது செய்யப்பட்டனர்.

அகவிலைப்படி உயர்வு, பணப்பலன், மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை வழங்கக் கோரி போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் சென்னை, பல்லவன் சாலையில் செயல்படும் போக்குவரத்துக் கழக ஓய்வூதிய அறக்கட்டளையை இன்று முற்றுகையிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

Read Entire Article