சென்னை: புதிதாக திறக்கப்பட்ட பெரியார் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை நியமிக்க அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையை விரிவாக்கம் செய்து, தரமான உயர் மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட ரூ.21.80 கோடியில் 6 தளங்களோடு பல்வேறு புதிய உயர் சிறப்பு சிகிச்சை வசதிகளுடன் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டது. பெரியார் அரசு மருத்துவமனை என பெயர் சூட்டப்பட்ட இந்த மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ம் தேதி திறந்து வைத்தார். பல்வேறு சிறப்பு வசதிகளுடன் மொத்தம் 560 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.