உலக வங்கி நிதியில் ஏரிகள், கால்வாய்கள் சீரமைக்கப்படும் இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்தப் பகுதிகளில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.449 கோடியே 59 லட்சம் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்திருப்பதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உலக வங்கி நிதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெறும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ரூ.1.09 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.