சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கம்

2 weeks ago 7

சென்னை: சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று நெல்லையில் இருந்து காலை 6.19 மணிக்கு இயக்கப் பட்ட வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்று சென்னை திரும்புவதற்கு முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருந்த பயணிகள் அனைவரும் டிக்கெட் உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் 14 சேர் கார் பெட்டிகளும், 2 எக்சி கியூட்டிவ் சேர் கார் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பெட்டிகள் இணைத்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டதால் தென்மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் மகிழ்ச்சியடைந்து வரவேற்றுள்ளனர்.

The post சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article