சென்னை: சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மாமனார், மாமியார், மருமகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நுங்கம்பாக்கம், வைகுண்டபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் வீரக்குமார்(62). இவரது மனைவி லட்சுமி(56). இவர் கடந்த 4-ம் தேதி மாலை 6.30 மணியளவில், வீட்டில் சமையல் செய்துகொண்டே பூஜையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சமையல் எரிவாயு தீர்ந்து, அடுப்பு அணைந்துள்ளது.