சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பொன்னேரி – கவரப்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணியால், அந்த வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்கள் இன்று காலை 9.50 முதல் மாலை 3.50 வரை ரத்து செய்யப்பட உள்ளன. அதன்படி, சென்ட்ரலில் இருந்து இன்று காலை 8.5, 9, 9.30, 10.30, 11.35க்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.55, 11.25, நண்பகல் 12, பிற்பகல் 1, 2.30 மாலை 3.15க்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் ரயில்களும்,
சென்ட்ரலில் இருந்து காலை 8.35, 10.15க்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரயில்களும், சூலூர்பேட்டையில் இருந்து காலை 11.45 மற்றும் பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40, நண்பகல் 12.40க்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55க்கு புறப்பட்டு கடற்கரை வரும் புறநகர் மின்சார ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
The post சென்னை-கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.